• Monday, 18 August 2025
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் குங்குமலட்சார்ச்சனை

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் குங்குமலட்சார்ச்சனை

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் சிரவண மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று குங்கும லட்சார்ச்சனை நடந்தது. கோவில் மண்டபத்தில் உற்சவர் காமாட்சி தாயாரை எழுந்தருள செய்து, அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓதி குங்கும லட்சார்ச்சனை செய்தனர். முன்னதாக கலச ஸ்தாபனம், கணபதி பூஜை, புண்யாவதனம், கலச ஆராதனை நடந்தது.

குங்கும லட்சார்ச்சனையில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், உதவி அதிகாரி சத்ரேநாயக், கண்காணிப்பாளர் பூபதி மற்றும் கோவில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comment / Reply From