• Monday, 18 August 2025
ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி

ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 போர் வீரர்களின் வாரிசுதாரர்களை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்தார்.
 
அதோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாயை வழங்கினார்.  
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சோளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த படைவீரர் என்.பாலமுருகனின் தாய் குருவம்மாள், கிருஷ்ணகிரி மாவட்டம், இராகிமானப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த படைவீரர் என்.சந்தோஷ் தாய் சித்ரா, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த படைஅலுவலர் எஸ்.ஆனந்த் மனைவி பிரியங்காநாயர், திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை கிராமத்தைச் சேர்ந்த மறைந்த படைவீரர் எஸ்.சபரிநாதன் தாய் எஸ்.மனோன்மணி ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து நிவாரண நிதியைப் பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்வின் போது, அரசு பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி.ஜகந் நாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

Comment / Reply From