• Thursday, 02 May 2024
செம மழை : 7 மாவட்டங்களில் விடுமுறை

செம மழை : 7 மாவட்டங்களில் விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலவி வருகிறது.

இதன் காரணமாக பல்வேறு  மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடியில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால், அங்கும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!