• Wednesday, 20 August 2025
சீராகுமா கட்சி? : சிந்திக்கும் கமல்

சீராகுமா கட்சி? : சிந்திக்கும் கமல்

கிட்டத்தட்ட புதுக் கட்சியைத் தொடங்குவதுபோல மிகப்பெரிய வேலை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு இருக்கிறது. கொரோனாத் தொற்று மீடியா புல்லட்டின் போல நாள்தோறும் கட்சி நிர்வாகிகளின் வெளியேறுதல் படலம் நடந்து ஒருவழியாக அமைதியாகியிருக்கிறது கட்சி. ஈ.சி.ஆரில் இருக்கும் கமலின் வீட்டில் ஒருமுறை தீவிபத்து ஏற்பட்டதால் அந்த வீட்டை அப்படியே போட்டுவிட்டு, தற்போது சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள ‘சோமர்செட்’ ஓட்டலில்தான் கமல் நிரந்தரமாகத் தங்குகிறார். அவருக்காக ஓட்டலின் 5-வது மாடி முழுமையாக ஒதுக்கப்பட்டு, வீடு போன்ற செட்டப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றுப் பரவலால் வெளியில் செல்லாமல் தொடர்ந்து ஓய்வில் இருக்கிறார் கமல். அதேநேரம், தோல்வி குறித்தும், நிர்வாகிகளின் வெளியேறுதல் குறித்தும், கட்சியை மறுகட்டமைப்பு செய்வது பற்றியும் நாள்தோறும் இணையவழியே நிர்வாகிகளுடன் உரையாடிவருகிறார் கமல்.

மேலும், தனிப்பட்ட முறையில் கட்சியை எப்படிக் கொண்டு செல்லலாம் என்று அனைவரும் தனக்கு மெயில் அனுப்புமாறும் கூறியிருக்கிறார். காலியாக உள்ள அனைத்துப் பொறுப்புகளுக்கும் ஆட்களை நியமிக்கவும் ஆலோசனை நடக்கிறது. கொரோனாப் பரவல் முடிந்து அனுமதி கிடைத்ததும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ பட ஷூட்டிங், ‘இந்தியன் 2’ ஷூட்டிங் என இரண்டிலும் விரைவில் பங்கேற்பார்.

 

Comment / Reply From