• Friday, 26 April 2024
சபாஷ் ஸ்டாலின் : களமிறங்கி கலக்கும் முதல்வர்

சபாஷ் ஸ்டாலின் : களமிறங்கி கலக்கும் முதல்வர்

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் சேப்பாக்கம் எழலக வளாகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கட்டுப்பாட்டு மையத்துக்கும் சென்று வெள்ள பாதிப்புகளை கேட்டறிந்தார்.
 
அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளை முழுவீச்சில் முடுக்கிவிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 
2-வது நாளாக இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட கல்யாணபுரம் பகுதிகளில் கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமுக்கும் சென்றார்.
 
பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார்.
 
இதன்பிறகு வடசென்னை பகுதிகளான ராயபுரம், ஆர்.கே.நகர் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார்.
 
ராயபுரம் தொகுதியில் பாரத் திரையரங்கம் ரவுண்டானா பகுதியில் தேங்கி இருந்த மழை வெள்ளத்தை பார்வையிட்டார். பின்னர் அப் குதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!